tamilnadu

img

வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லையாம்... கதை விடுகிறார் மத்திய அமைச்சர் ஜவடேகர்

பனாஜி:
விவசாயிகளுக்கு விரோதமான, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார்,தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.இதனால் மத்திய பாஜக அரசுஅதிர்ச்சியும் கோபமும் அடைந்துள் ளது.  மத்திய அமைச்சர்கள் புதியகதைகளை சொல்ல ஆரம்பித்துள்ள னர். புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை என்றுமத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  கதை விடுகிறார்.கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  பேசுகையில், வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்லவரவேற்பு கிடைத்துள்ளதாக கூறிக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை. பஞ்சாபில் மட்டுமே இன்னும் போராட்டம் நடக்கிறது. கள நிலவரம் என்னவெனில், வேளாண் சட்டங்களை விவசாயிகள் வரவேற்கின்றனர் என்று கூறி புளகாங்கிதம் அடைந்துள்ளார்.