காந்தியை விமர்சித்தும் பேட்டி
குவாலியர், நவ.20- மகாத்மா காந்தியைப் படு கொலையை செய்த கோட்சே வின் நினைவு நாளை, இந்து மகாசபையைச் சேர்ந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் கொண்டாடினர். அப்போது காந்திக்கு எதிராக துண்டறிக்கைகளையும் அவர்கள் வெளியிட்டனர். இது சர்ச்சைகளை ஏற்படுத் திய நிலையில், இந்து மகாசபை யின் செய்தித் தொடர்பாளர் நரேஷ் பாதம் மீது ஐபிசி பிரிவு 153-ஏ இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மூத்த மருமகள் ராஜ்யஸ்ரீ சவுத்ரியும், குவாலியர் சென்று கோட்சே வின் உருவப்படத்திற்கு அஞ் சலி செலுத்தி விட்டு, மகாத்மா காந்தியை விமர்சித்துள்ளார்.
சுதந்திர போராட்டத்தில் காந்தி பீஷ்மராக நடித்ததாக வும், தேசபக்தரான கோட்சே வை காங்கிரஸ் ஆட்சியாளர் கள் ஒரு பயங்கரவாதியாக சித்த ரித்து விட்டார்கள் என்றும் கூறி யுள்ள ராஜ்யஸ்ரீ, “நாதுராம் கோட்சே சிலை ஒரு அலுவல கத்தில் மட்டும் அல்லாது; ஒவ்வொரு இந்திய இதயத்தி லும் இடத்தைப் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பேசியுள்ளார். ராஜ்யஸ்ரீ, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சகோதரி வழி மருமகள் ஆவார்.