tamilnadu

img

தமிழகத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு 

தமிழகத்தில் இன்று மட்டும் 75 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் நேற்று வரை 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மேலும் புதிதாக 75 பேருக்கு கெரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 74 பேர் தில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்  என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. 
தில்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1103 பேருக்கு நடந்த சோதனையில் இதுவரை 264பேருக்கு கொரோனா தொற்று  உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பலரது மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.  எனினும் கொரோனா வைரஸ் தற்போது வரை தமிழகத்தில் சமூக பரவலாக மாறவில்லை. இந்தியாவில்  கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.