tamilnadu

img

நடந்து சென்ற தொழிலாளர்கள் 42 பேர் விபத்துகளில் பலி... ஊரடங்கு காலத் துயரம்

புதுதில்லி:
கொரோனா ஊடரங்கையொட்டி, நாடு முழுவதும் கடந்த 45 நாட்களாக பேருந்து, ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், வேலை காரணமாக வெளிமாநிலங்களில் தங்கியிருந்த பல லட்சம் தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலர் 500 முதல் 1500 கி.மீ. தூரமானாலும் நடந்தே சென்றுவிடுவது என்று தீர்மானித்தனர்.

அவ்வாறு நடந்தே ஊருக்கு புறப்பட்டவர்களில், மார்ச் 24துவங்கி மே 3 வரையிலான காலகட்டத்தில் 42 பேர் சாலைவிபத்துக்களில் உயிரிழந்திருப்பதாக ‘சேவ் லைப்’ எனும்தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து கூறியுள்ளது.அதாவது, நாடு முழுவதும் 600 சாலை விபத்துக்கள் நடந்த நிலையில், அதில் மொத்தம் 140 பேர் பலியாகி இருப்பதாகவும், இவர்களில் நடந்தும், பேருந்துகள், லாரிகளில் ஒளிந்து கொண்டும் சென்ற 42 புலம்பெயர் தொழிலாளர்களும் அடங்குவார்கள் என்று கூறியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமன்றி, அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் 17 பேர்இறந்திருப்பதாக தெரிவித்துள்ள ‘சேவ் லைப்’ அறக்கட் டளை, தில்லி, மகாராஷ்டிரா, குஜராத், அசாம், கேரளா,கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய9 மாநிலங்களில்தான் அதிகபட்சமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.