tamilnadu

img

370 உரிமைப் பறிப்பு ஒரு பகல் கொள்ளை.. காஷ்மீரின் உரிமையை அடைந்தே தீருவோம்... பிடிபி தலைவர் மெகபூபா முப்தி உறுதி

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370-ஐ பறித்த மத்திய அரசின் செயல், ஒருபகல்கொள்ளை என்று அம்மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித்தலைவருமான மெகபூபாமுப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பாஜக அரசால், கடந்த 2019 ஆகஸ்ட் 5 அன்று,பொது பாதுகாப்புச் சட்டத்தின் (Puplic Security Act -PSA) கீழ் கைது செய்யப்பட்ட மெகபூபா முப்தி, 14 மாத தடுப்புக்காவலுக்குப் பின்செவ்வாயன்று விடுவிக்கப் பட்டார். இந்நிலையில், 83 விநாடிகள் ஓடும் ஒலிநாடாவில் பேசி,அதனைத் தனது டுவிட்டர் பக்கத்தில் மெகபூபா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புஅதிகாரத்தை மத்திய அரசுபறித்தது, பகல் கொள்ளை.எங்களிடம் இருந்து சட்டவிரோதமாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக, அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பறிக்கப்பட்டதை நாங்கள் மீண்டும் திரும்பப் பெறுவோம் என நான் உறுதிசெய்கிறேன்.

ஆயிரக்கணக்கான மக் கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ள நிலையில், அவர்களின் வழியில் காஷ்மீருக்கு தீர்வு கிடைக்க நாங்கள்பணியாற்றுவோம். இது சாதாரணமான பணி அல்ல. வழியில் ஏராளமான தடைகளும்,கடினமான விஷயங்களும் இருக்கும். ஆனால் இந்தசாலையைக் கடக்க நம்முடைய உறுதியானதன்மை மற்றும் தீர்மானம் இந்த போராட்டத்தில் நமக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார்.