tamilnadu

img

முப்படை தளபதிக்கு உதவ 37 அதிகாரிகள் 

சென்னை
இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். புத்தாண்டு தினத்தில் (கடந்த 1-ஆம் தேதி) பொறுப்பேற்ற பிபின்,"அரசியல் இல்லாமல் முப்படைகளை ஒருங்கிணைத்து குழுவாக செயல்பட வைப்பதே எனது இலக்கு" எனக் கூறினார். பிபின் ராவத்துக்கு ஒதுக்கப்பட்ட முப்படை பதவி இந்திய ராணுவத்துறைக்கு புதியது என்பதால் அவருக்கு உதவ 2 இணை செயலாளர்கள், 5 துணை செயலாளர்கள், 22 செயலாளர்கள் என மொத்தம் 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

;