tamilnadu

img

ஜம்முவில் 3 மாடி கட்டிடம் தரைமட்டம் - இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள் 


ஜம்முவில் மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்துக்குள் தீப்பிடித்த போது அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது- 
ஜம்மு காஷ்மீரில் கோல்புள்ளி பகுதியில் உள்ள கட்டடத்தின் தரை தளத்தில் இன்று காலை 4.48 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக 5.30 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 5 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் இரண்டு வீரர்களும் பொதுமக்களும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டனர். மேலும் மூன்று தீயணைப்பு வீரர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.