tamilnadu

img

125 ரூபாய் நாணயம் வெளியீடு

புதுதில்லி,அக்.30- 125 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்திய மக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு தியானம், கிரியா யோகாவை அறிமுகப்படுத்திய யோகி பரமஹம்ச யோகானந்தா வின் 125 ஆவது பிறந்தநாள் விழா  2018 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 

அதன் நினைவாகத் தற்போது இந்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் நினைவு நாணயம் இது தான்.  இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட நினைவு நாணயங்களில் அதிக பட்ச  மதிப்பாக தஞ்சை பிரகதீஸ் வரர் ஆலயம் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் கடந்து விட்டதை நினைவுபடுத்தும் விதத்தில் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நாணயம் வெளியிடப்பட்டது.

;