tamilnadu

img

டெல்லி  மருத்துவமனையில் 30 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 3 பேர் கைது 

டெல்லி மருத்துவமனையில் வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்புக் காவலர் உட்பட 3 பேர்  30 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெண் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் ரோஹினி பகுதியில் உள்ள மருத்துவமனையில் வாகன நிறுத்துமிடத்தில் 30 வயது பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரில் ரோஹினி மருத்துவமனையின் பாதுகாப்புக் காவலர் மற்றும் இரண்டு முன்னாள் ஊழியர்கள் ஆவார்.

அக்டோபர் 30 ஆம் தேதி இரவில் ரோஹினியில் உள்ள பாபா சாஹிப் பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவமனையின் வாகனங்களை நிறுத்தும், பகுதியில் மூவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 30 வயதான அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ரோஹினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரை அந்தப் பெண் பார்வையிட்டதாகவும், நோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்காக தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்

மருத்துவமனையின் முன்னாள் ஊழியர்களும், பாதுகாப்புக் காவலரும் அந்தப் பெண்ணை மிரட்டியதாகவும், ஆவணங்களை சரி பார்ப்பதாக பொய்யான காரணத்தை கூறி வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார்.  அவரின் புகாரை தொடர்ந்து,  அக்டோபர் 31 ஆம் தேதி பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் மனீஷ், 22, பிரவீன் திவாரி (24), கன்வார் பால் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.