tamilnadu

img

ஜேஎன்பூ பல்கலை மாணவர் தற்கொலை

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று முதுகலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்கலை கழக வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள படிக்கும் அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு மர்மமான முறையில் இரண்டாம் ஆண்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறைக்கு இன்று காலை 11.30 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மாணவர் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு பட்டதாரி என்ற முதல்கட்ட தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரங்கள் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை