tamilnadu

img

வைத்திலிங்கத்தை ஆதரித்து சிபிஎம் பிரச்சாரம்

புதுச்சேரி, ஏப்.16-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரெட்டியார் பாளையத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் நடைபெற்றது. இந்த இருசக்கர வாகன பிரச்சாரத்திற்கு பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன்,பிரபுராஜ், சத்தியா இடைக்குழு செயலாளர் கள் நடராஜன், மதிவாணன், பிரதேசக்குழு உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர். உழவர்கரை தொகுதி, தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, முத்தியாள்பேட், ராஜ்பவன், முதலியார்பேட்,நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் இப்பிரச்சாரம் நடைபெற்றது.இப்பிரச்சாரத்தில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கள், “புதுச்சேரி மக்கள்ளின் பிரச்சனைகளை நன்கறிந்த மதச்சார்பற்ற கூட்டணியின் வேட் பாளர் வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும்” என்றனர்.

;