tamilnadu

img

விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிராக டெல்லி-அமிர்தசரஸ் நெடுஞ்சாலையில் போராட்டம் 

விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லி-அமிர்தசரஸ் நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
டெல்லி அமிர்தசரஸ் நெடுஞ்சாலையை வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தடுத்து விவசாய சட்ட மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப்பில் பல விவசாய அமைப்புகள் நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளதாக கிசான் மஸ்டூர் சங்கர்ஷ் குழு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக உழவர் அமைப்புகள் இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நெடுஞ்சாலைகளைத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று சுமார் 46 இடங்களில் நடைபெறுகிறது. 

நான்கு மணி நேரம் சாலைகள் தடைசெய்யப்பட்டாலும், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படையினர் மற்றும் பிற அவசர சேவைகள் நகர்த்த அனுமதிக்கப்பட்டது. அனைத்து அவசரகால சேவைகளுக்கும் பாதை வழங்கப்படும். எங்கள் நோக்கம் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதல்ல, ஆனால் அரசாங்கம் எங்கள் வேதனையை கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகளின் அன்றாட விவகாரத்தில் கார்ப்பரேட் ஜாம்பவான்கள் குறுக்கிடுவதை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.