tamilnadu

img

புதுவை கல்வித்துறை அலுவலகம் முன்பு போராட்டம்

புதுச்சேரி,ஆக.24- அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்க ளின் கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி  புதுச்சேரி கல்வித்துறை முன்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் உள்ள  ஆசிரியர்கள், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். அரசு ஆசிரியர்களுக்கு உள்ளதைப் போல்  ஏ.சி.பி.,எம்.ஏ.சி.பி  அமல்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கல்வித்துறை முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி-கடலூர் கத்தோலிக் கல்வி நிலையங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் அருளா னந்தம் தலைமை தாங்கினார். செயலா ளர் சுவாமிநாதன், அரசு ஊழியர் சங்கங்  கங்களின் சம்மேளன கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன், பள்ளிகளின் பொருப்பா ளர்கள் அந்தோணிசாமி, ஜான்போஸ்கோ, கிறிஸ்தோபர், வின்சென்ட்ராஜ் ஆகியோர்  கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.  போராட்ட இறுதியில் கல்வித் துறைசெயலர்,  இயக்குநர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது.