tamilnadu

img

விடுபட்ட தொழிலாளர்களுக்கும் நிவாரணம்: சிஐடியு வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூன் 25- புதுச்சேரியில் முதல்வர் அறிவித்த  கொரோனா நிவாரணத் தொகை 1,000  ரூபாயை பதிவு செய்துள்ள அனைத்து  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும்  வழங்க வலியுறுத்தி புதுவை அமைப்புசாரா  நலச் சங்க அலுவலகம் முன்பு சிஐடியு  பிரதேச செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சிஐடியு நிர்வாகிகள் மது, மதிவாணன், பிரபுராஜ், ரவிக்குமார் வடிவேல் மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அதிகாரியை  சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதி காரி ஜூலை 2ஆம் தேதிக்குள்  விடுபட்ட உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.