tamilnadu

img

ஊரடங்கை மீறியதாகப் புதுச்சேரி ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது வழக்கு 

புதுச்சேரி
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் ஆளுங்கட்சி எம்எல்ஏ-வாக (காமராஜ் நகர் தொகுதி) இருக்கும் ஜான் குமார் ஊரடங்கு விதிகளைப் பின்பற்றாமல் நெல்லித்தோப்பு கிராமத்தில் மக்களுக்கு அரிசி விநியோகம் செய்துள்ளார். விதிகளைப் பின்பற்றாமல் ஒரே நேரத்தில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் புதுச்சேரி வருவாய்த் துறை போலீஸுக்குத் தகவல் கொடுக்க ஜான்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. 

ஊரடங்கை மீறியது ஜான் குமாருக்கு இது புதிதல்ல. கடந்த மாதம் தனது வீட்டுக்கு அருகில் 200 பேருக்குக் காய்கறி விநியோகம் செய்ததாகக் கூறி ஏற்கெனவே ஜான் குமார் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஜான் குமார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;