கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பது இனியும் நீடித்தால், புதுச்சேரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் மரணமடைந்துள்ளனர். 67 பேர் குணமடைந்துள்ளனர். 88 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று, முத்தியால்பேட்டையை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், புதுச்சேரியில், கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பது இனியும் நீடித்தால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.