tamilnadu

img

வெங்காய மாலை அணிந்து புதுச்சேரியில் போராட்டம்

புதுச்சேரி,டிச.12- வெங்காய விலை உயர் வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி வெங்காய மாலை அணிந்து போராட் டத்தில் ஈடுபட்டார். மோடி தலைமையிலான மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு  மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் இந்திய அர சியல் சாசனத்தை சீர்கு லைத்து, பிரிவினையை தூண்  டும் நோக்கத்துடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதி ராக கோஷங்கள் எழுப் பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவா யம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முன்னதாக வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவ லகத்தில் இருந்து காங்கிரஸ்  கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை முதலமைச்சர் நாராயண சாமி தொடங்கி வைத்தார்.