புதுச்சேரி, ஜூன் 8- பொதுபட்ஜெட்டில வேலைவாய்ப்புக்கான முன்னூரிமை திட்டங்க ளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 2020-21ஆம் ஆண்டிற் கான பொதுபட்ஜெட்டை இம்மாதம் அரசு தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் டில் இடம் பெறவேண்டி அம்சங்கள் குறித்து முதல் வர் நாராயணசாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் பிரதேச செய லாளர் ஆர்.ராஜாங்கத்திடம் காணொலி காட்சி மூலம் கருத்துகளை கேட்டரிந்தார். அப்போது கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட ஆலோ சணைகள் வருமாறு: புதுச்சேரியில் வேலை வாய்ப்புகளை அதிக ரிக்க வேண்டிய நடவடிக்கை களை ஒரு குழு அமைத்து செயல்படுத்த வேண்டும்.
பாரம்பரியமான கைத்தறிக் கூடங்களையும், பஞ்சாலை களையும் புனரமைப்பதற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் ஒருங் கிணைந்த கைத்தறி உற் பத்திக் கூடங்களை ஏற்ப டுத்தி நெசவாளர்களை பாது காக்க வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 கொடுத்து கொள்முதல் செய்யும் பாண்லே நிர்வாகம், புதுவை யில் கொள்முதல் செய்யும் பாலுக்கும் அதே விலையே வழங்க வேண்டும். 100 நாள்வேலை திட்டத்தில் பணி நாட்களை 200 நாட்களாக உயர்த்தி, நகர்புறத்திற்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகளில் குறைந்த விலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும். மதுபானக் கடைகளின் உரிமத்தை பொது ஏலத் திற்கு விட வேண்டும். முதி யோர், விதவை பென்ஷன் திட்டத்தில் உள்ள விதிமுறை களை மாற்றி அமைக்க வேண்டும். சுகாதாரம், சமூக நலத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.