புதுச்சேரி,பிப்.24- புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் 6ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர். பல் கலைக்கழக நிர்வாகம் கல்விக்கட்ட ணத்தை 200 மடங்குஉயர்த்தியுள்ளது. மேலும், மாணவர்கள் பயன்படுத்தி வந்த இலவச பேருந்து வசதியை நிறுத்தியது. இதனை கண்டித்தும், நீண்ட நாள் கோரிக்கையான புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடம் வழங்க வலியுறுத்தியும் பல்கலைக் கழக மாணவர் பேரவை சார்பில் 19-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
அமைதியாக அறவழியில் போராடி வரும் மாணவர்களை மிரட்டும் வகையில் திங்களன்று (பிப்.24) துணை ராணுவத்தை வர வழைத்துள்ளது பல்கலைக் கழக நிர்வாகம். மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிர்வாக அலுவலகம் முன்பு வரை ராணுவ அணி வகுப்பு நடத்தப்பட்டது. மேலும், பல்கலைக் கழக வளாகம் முழுவதும் ராணுவக் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப் பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைகழக வட்டாரங்களில் விசாரித்தபோது, வருகின்ற (பிப்.26)பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நடை பெறுகிறது; அந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்று மாணவர் களுக்கு பட்டங்கள் வழங்க இருப்ப தாகவும், அற்காகவே துணை ராணுவம் வர வழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப் பட்டாலும் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கவே துணை ராணுவபடை குவிக்கப் பட்டிருப்பதாகவும் செய்திகள் உலா வரு கின்றன.
போராட்டத்திற்கு கல்லூரி மாணவர்கள் ஆதரவு
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக கட்டணக் கொள்ளையை கண்டித்து தொடர்ந்து 19வது நாளாக போராட்டத்தில் ஈடு பட்டு வரும் பல்கலைக்கழக மாணவர் பேர வைக்கு ஆதரவு தெரிவித்து, புதுச்சேரி மாநிலம் தழுவிய மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் திங்களன்று (பிப்.24) நடைபெற்றது. புதுச்சேரியிலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்பு களை புறக்கணித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். காலாப்பட்டிலுள்ள அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக் கணித்து அண்ணாசாலையிலுள்ள காம ராஜர் சிலை எதிரே மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதே போல் கதிர் காமம் இந்திரா காந்தி கல்லூரி, பாரதிதாசன், லாஸ்பேட் தாகூர்ஆர்ட்ஸ் உள்ளிட்ட கல்லூரி மாண வர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கம், மாணவர் பெரு மன்றம், திமுக மாணவர் அணி,புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு ஆகிய பல்வேறு மாண வர், வாலிபர் அமைப்புகள் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற னர். மேலும், பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகைத் தரும் குடி யரசு துணைத் தலைவருக்கு இந்த அமைப்பு கள் சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.