புதுச்சேரி தொற்று பாதிப்பு 3,171
புதுச்சேரியில் புதிதாக 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,293ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 48 பேர் இறந்துள்ளனர்.
விபத்து
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தவணி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மணி இருசக்கர வாகனத்தில் ராட்டினமங்கலம் கிராமத்தில் துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுனர் மார்கபந்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிணறில் 2 சிறுமிகள் சடலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அருகே உள்ள உதயமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஞானசம்பந்தம் என்பவருடைய குழந்தைகள் அமுதவல்லி (2), ரிஷிகா (3) இருவரும் நீலமங்கலம் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் அவரது பாட்டி வீட்டின் அருகே உள்ள பலராமன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து தியாகதுருகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, கிடைத்த தகவலின் பேரில் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நாப்பாளைய தெருவைச் சேர்ந்த பயாஸ் அகமது (24), கீழ்பெரும்பாக்கம் இமானுவேல் (25), கார்த்திகேயன் (25), கணேஷ் (28), வண்டிமேடு கார்த்திக்ராஜா (28) ஆகிய 5 பேரை கைது,
அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அநாதை உடல்கள் அடக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூகசேவகர் மணிமாறன் என்பவர் வேலூர் பாலாற்றங்கரையோரம் உள்ள மயானத்தில் அரசு அனுமதியோடு 5 அனாதை உடல்களை முறைப்படி அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார்.
100 பல்ஸ் ஆக்சிமீட்டர் நன்கொடை
ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கன்னிமாரா தலைவர் ரோடேரியன் ஏ.எப்.கான், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னா பட்னா தலைவர் ரோடேரியன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் 100 பல்ஸ் ஆக்சிமீட்டர்களை நன்கொடையாக வழங்கினர்.