புதுச்சேரி, ஜூலை 31- புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வின் ஒரு பகுதியாக புதுச்சேரி நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு தினம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுவை அறிவியல் இயக்கச் செயலாளர் முனைவர் அருண் நாகலிங்கம் பங்கேற்று பேசினார். அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வாக சந்தரயான் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் பல்வேறு கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது. மாணவர்களின் கேள்வித் திறன் இதன்மூலம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஹேமலதா, ரேணுகாதேவி உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.