tamilnadu

img

புதுச்சேரியில் 3 ஆயிரத்தை நெருங்கும் தொற்று

 புதுச்சேரி, ஜூலை 27- புதுச்சேரியில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,872ஆக அதிகரித்துள்ளது. மூலகுளம், முதலியார்பேட், கொசப்பாளையம் பகுதியை  சேர்ந்தவர்கள் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலம்
மேட்டுப்பாளையம் ராம்நகர் முதல் குறுக்குத்தெரு, தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், தர்மாபுரி கலைவாணர்  வீதி, தட்டாஞ்சாவடி இஸ்ரவேல் நகர், நேசர் வீதி, பூமியான்  பேட்டை ஜவகர் நகர் கே பிளாக், காலாப்பட்டு கனகசெட்டிக்  குளம் வடக்கு வீதி, காலாப்பட்டு புதுச்சேரி பல்கலைக்கழக வளாகம் டி பிளாக் ஆகிய பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டல மாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர்  அருண் அறிவித்துள்ளார்.
முதல்வருக்கு கொரோனா பரிசோதனை
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைத்தலை வர் சிவக்கொழுந்து, முதல்வர் நாராயணசாமி மற்றும்  அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.