கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மனநல பிரச்சனைகளுக்கு ஆளாக நேருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 20 சதவிகிதம் பேருக்கு 90 நாட்களுக்குள் மனநல பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தி லான்செட் சைக்காட்ரி ஜார்னலில் இது குறித்த ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையில், அமெரிக்காவைச் சேர்ந்த 6.9 கோடி மக்களின் சுகாதார பதிவுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோயாளிகளின் பதிவுகளும் இதில் அடங்குகிறது. கொரோனாவில் இருந்து தப்பிப் பிழைத்த ஐந்தில் ஒருவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நோயாளிகளுக்கு கவலை, மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவை இருக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மனநல பிரச்சனைகள் ஏற்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், வருங்காலங்களில் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் அவசர நிலையாக ஆராய்ந்து மனநோய்களுக்கு புதிய சிகிச்சைகளை கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.