சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறிக்கை
புதுதில்லி, மே 27-17வது மக்களவைத் தேர்தல் அளித்துள்ள அனுபவத்திலிருந்து பாடம் கற்போம் என்றும் தவறுகளை சரி செய்து, சரிவிலிருந்து மீள்வோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியேற்றுள் ளது. போராட்டங்கள் மூலமாக அரசியல் தலையீட்டை வலுப்படுத்து வோம் எனவும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட் களில் புதுதில்லியில் மத்தியக் குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், 17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து அதுவெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக-தேசிய ஜனநாயகக்கூட்டணி 17ஆவது மக்களவைக் கான தேர்தல் களில் பெரும்பான்மை யுடன் தீர்மானகரமானதொரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் ஒருசில மாநிலங்கள் தவிர இதர மாநிலங்களில் அநேகமாக எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை இத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித் துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் இத்தேர் தலில், தாங்கள் வலுவாக இருக்கக் கூடிய மாநிலங்களிலேயே, கடும் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன.கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மக்கள் மீது திணித்த கடும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது மக்கள் கவனம் செல்லாத விதத்தில், பாஜக, மக்களின் கவனத்தை, மிகவும் வெற்றிகர மான முறையில் திசைதிருப்பி இருக்கிறது. மதவெறி, தேசியவெறி ஆகியவற்றைச் சுற்றி அது கட்டி யெழுப்பிய வெறுப்புப் பிரச்சாரங்களும், அத்துடன் தாங்கள்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடு பவர்கள் என்று அவிழ்த்துவிட்ட பிரச்சாரங்களும் மக்கள் நாள்தோறும் எதிர்கொண்ட அனைத்துவிதமான பிரச்சனைகளிலிருந்தும் கவலைப் படாத விதத்தில் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டது.இதற்கு, மோடியைப் பல்வேறு காரணிகள் மூலமாக தூக்கிப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட நட வடிக்கைகளும் உதவியுள்ளன. தொழில்நுட்பத்தையும் அதன் சாதனங்களையும் மிகவும் நுட்பமானமுறையில் பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் செயல்படும் புள்ளிவிபர விற்பன்னர்களின் உதவியோடு, சமூகத்தின் அடிமட்டம் வரை சென்று வெறியூட்டும் வகையில் மக்களுக்கு செய்திகளை அனுப்பிய செயல்பாடு உட்பட அனைத்தும் இதில் அடங்கும்.
இதற்காக ஊடகங்களின் பல பிரிவுகளை பாஜக தன்னுடைய பணபலத்தால் தன்வயமாக்கிக் கொண்டது. மோடி தூக்கிப் பிடிக்கப்படுவதற்கு, தேர்தல் ஆணையத்தின் பங்கும் ஒரு காரணியாக இருந்தது. ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் அமைப்புகளின் மிகப்பெரிய வலைப்பின்னலின் உதவி யோடு மேற்கண்ட செயல்பாடு நிறைவேற்றப்பட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,வாக்காளர் தளம் மிகவும் வலு வாக இருந்த இடங்களிலேயே ஒருமிகப்பெரிய சரிவினைச் சந்தித் துள்ளது. இத்தகைய சரிவிற்கு இட்டுச்சென்ற காரணிகள் எவை என்பது குறித்த சில பிரச்சனைகளை அரசியல் தலைமைக்குழு விவாதித்தது. 2019 ஜூன் 7-9 தேதிகளில் நடை பெறவுள்ள மத்தியக்குழுக் கூட்டம் இதுதொடர்பாக விவாதித்து,இத்தேர்தலில் பெற்ற அனுபவங் களை மிகவும் ஆழமானமுறையில் பரிசீலிப்பதன் அடிப்படையில் முறையான படிப்பினைகளை வரை யறுத்திடும். நாம் வலுவாக உள்ள மாநிலங்களில் இயங்கும் நம் மாநிலக் குழுக்களும், மத்தியக் குழுக்கூட்டத்திற்கு முன்பாகக் கூடி, கட்சியின் செயல்பாடுகள் குறித்து சுயவிமர்சன ரீதியாக மதிப்பீடுகளைச் செய்திடும். இவற்றின் அடிப்படை யில் மத்தியக் குழு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சுயேச்சையான பலத்தையும் வெகுஜனப் போராட்ட ங்கள் மூலமாக அரசியல் தலையீடு செய்யும் பலத்தையும் வலுப்படுத்திக் கொள்வதற்குத் தேவையான, சரிசெய்யும் நட வடிக்கைகளை உருவாக்கிடும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் இருவர், கேரளாவில் ஒருவர் 17ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிரு க்கின்றனர். தன்னுடைய வேட்பாளர் களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்திட்ட அனைவருக்கும் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.மேற்கு வங்கத்திலும் திரிபுரா விலும் மிகவும் உக்கிரமான பயங்கர வாத நடவடிக்கைகள் மற்றும் வன் முறை வெறியாட்டங்களுக்கு இடையில்தான் தேர்தல்கள் நடை பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் கள் வாக்களிக்க விடாமல் வலுக் கட்டாயமாகத் தடுக்கப்பட்டதாக பெரிய அளவில் செய்திகள் வந்திருக்கின்றன. தேர்தலை ‘நேர்மையாக வும் நியாயமாகவும்’ நடத்த வேண்டும் என்று நாம் தேர்தல் ஆணை யத்திடம் கூறி, அதற்கு அது அளித்தஉறுதிமொழிகளும் நிறைவேற்றப் படவில்லை. தேர்தல் நடைபெற்ற சமயத்தில் மேற்கு வங்கத்தில் இடதுசாரி ஆதரவாளர்கள் இருவரையும், திரிபுராவில் ஒருவரையும் இழந்திருக்கிறோம். இவ்விருமாநிலங்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் வன்முறை வெறியாட்டங் கள் தொடர்கின்றன. இவை, மதமோதல்கள் வெடித்திடுமோ என்கிறமிகவும் ஆபத்தான முனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
உதாரணமாக, தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய வுடனேயே ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறு பான்மையினர் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. புதிய அரசாங்கம் அனைத்துத்தரப்பினரையும் அர வணைத்துச் செல்லும் என்றும் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை உருவாக்கிடும் என்கிற நரேந்திர மோடியின் பிரகடனத்திற்கு முரணாக இது அமைந்துள்ளது.நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய அளவில்சவால்கள் காத்துக்கொண்டிருக் கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. நமது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசைப் பாது காத்தல், அரசமைப்புச்சட்ட நிறுவனங்களையும், மக்களின் உரிமை கள், குடிமைச் சுதந்திரங்களையும் பாதுகாத்தல் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற பிரச்சனைகள் மீது ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர் கொள்வதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக வேண்டுகோள் விடுக்கிறது.
நம்முடைய சமூகவலைப் பின்னலில் உருவாகியுள்ள அனைத்து மதத்தினர், அனைத்து இனத்தினருக்கிடையேயான நல்லிணக்கத்தை வலுப்படுத்திடவும், எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்களை எதிர்கொண்டிடவும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று நாட்டு மக்களின் அனைத்துத் தரப்பினரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு அறைகூவி அழைக்கிறது.
(ஐஎன்என்)