சென்னை, ஆக.20- ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத் துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, “நாடு தற்போது மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சென்று கொண்டி ருக்கிறது. மத்திய பாஜக அரசு சுயநலத்து டன் செயல்படுகிறது. காஷ்மீர் பிரச்ச னைக்காக தில்லியில் திமுக எம்.பி.க்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கி ரஸ் எம்.பி.க்களும் பங்கேற்பார்கள்” என்றார். பாஜக ஆளும் பெங்களூரில் தமிழில் பாடிய பாடகர்களை தாக்கியுள்ளனர். இதற் காக கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா வுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்வ தாக அவர் கூறினார்.