புதுச்சேரி, ஆக. 11- புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் அரசை வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து பிரதேச தலைவர் ஆனந்த், செயலாளர் சரவணன் ஆகியோர் முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: 15 லட்சம் பேர் வாழும் சின்னஞ்சிறு யூனி யன் பிரதேசமான புதுச்சேரியில் கொரோனா தொற்று சராசரியாக 250 பேரில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட 5,900 பேரில், 91 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. நோய் பரவல் அதிகமாவதற்கு மக்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டு வதை ஏற்க முடியாது. நோயை கட்டுப்படுத்த அரசு தவறி இருக்கிறது என்பதுதான் உண்மை. மருத்துவமனைகளில் படுக்கை வசதி யின்றி வீடுகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1000த்தை நெருங்குகிறது. தற்போதைய சூழல் நீடித்தால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ப தால், அரசு அறிவித்தபடி தனியார் மருத்து வக் கல்லூரிகளில் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மருத்துவக் கல்லூரிக்கு நோய் தடுப்பு துறையின் தலைவரை நியமிக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் பற்றாக்குறையாக உள்ள இதர பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நியமிக்க வேண்டும். வென்டிலேட்டர்கள், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற உயர்மருத்துவ சிகிச்சைக்கு தேவை யான வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். கோவிட் மருத்துவமனையாக செயல்படும் கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்குத் தேவையான மருத்துவ உபகர ணங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.