திருவனந்தபுரம், ஜுலை 10 - குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான தனி நீதிமன்றம் எர்ணாகுளத்தில் அமைக்க கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு மாவட்ட நீதிபதி, ரகசிய வாக்குமூல உதவியாளர், எழுத்தர் உட்பட 13 பணியிடங்கள் உருவாக்கப்படும். நிறுத்தப்பட்டுள்ள எர்ணாகுளம் வக்ப் தீர்ப்பாயத்திலிருந்து மறுசீரமைப்பு மூலம் 10 பணியிடங்கள் அடையாளம் காணப்பட வேண்டும். எர்ணாகுளத்தில் நடிகை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கை இதே தனி நீதிமன்றத்தில் விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. தன்னார்வ வாரிய தலைவர்களின் ஊதியம் ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாகவும் முழு நேர வாரிய தலைவர்களின் ஊதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. கேரள உயர்நீதிமன்ற ஊழியர்களின் ஓய்வூதிய வயது மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதுக்கு இணையாக மாற்றுவதற்கான மசோதாவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.