தந்தை பெரியாரின் 141 வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிரதேசத் தலைவர் நிலவழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் நிர்வாகிகள் ரமேஷ், ஜெயராமன் ,ராம்கோபால்,சரவணன், அரிகிருஷ்ணன், முனியாண்டி, ராம்ஜி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.