tamilnadu

img

தனியார் மருத்துவமனைகளில் ஐ.சி.யூ படுக்கை முன்பதிவு திட்டம் - உயர்நீதிமன்றம் நிறுத்தி வைப்பு 

டெல்லியில் முதல் அபிப்பிராயத்தின் அடிப்படையில், தில்லி அரசாங்கத்தின் உத்தரவு தன்னிச்சையானது என்றும், நியாயமற்றது மேலும், அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று நீதிபதி நவின் சாவ்லா கூறியுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு 80 சதவிகிதம் ஐ.சி.யூ படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு ஆம் ஆத்மி கட்சி உத்தரவிட்டிருந்தது. இதனை இன்று உயர்நீதிமன்ற நிறுத்தி வைத்துள்ளது. மேலும், அரசின் முடிவுகள் தன்னிச்சையானது என்றும், அரசியலமைப்பின் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என நீதிபதி நவீன் சாவ்லா கூறியுள்ளார். நோயாளிகளுக்கு 80 சதவீத ஐ.சி.யூ படுக்கைகளை ஒதுக்குவதற்கான உத்தரவை ரத்து செய்யுமாறு 'சுகாதார வழங்குநர்கள் சங்கம்' வேண்டுகோள் விதித்திருந்தது. 33 மருத்துவமனைகள் அதன் உறுப்பினர்கள் என்றும், தில்லி அரசாங்கத்தின் உத்திரவு பகுத்தறிவற்ற முறையில் நிறைவேற்றப்பட்டதால் அது ரத்து செய்யப்படுவதாக அச்சங்கம் கூறியுள்ளது.