புதுதில்லி, நவ. 11- புதுதில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி மாணவிக ளுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவிப்பணம் மற்றும் சலுகை களை அளித்து, அவர்களின் கல்வி உரிமையைக் காப்பாற்றி, அவர்கள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து தடுத்திட வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தில்லி மாநிலக்குழு அறிக்கை வெளியிட்டி ருக்கிறது. புதுதில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஏ-கணிதம் படித்துவந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தில்லி தலைவர் மைமூனா முல்ல மற்றும் பொதுச் செயலாளர் ஆஷா ஷர்மா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டிருப்பதாவது: பல்லாயிரக்கணகான கனவு களை நெஞ்சில் ஏந்தி தலைநகருக் குப் படிக்க வந்த இளம்மாணவி, ஐஸ்வர்யா ரெட்டி, புதுதில்லி யில் உள்ளலேடி ஸ்ரீராம் கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு பிஏ-கணி தம் (ஹானர்ஸ்) படித்து வந்த வர், நவம்பர்3 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அறிந்து திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தோம். தெலுங்கானா ராங்காரெட்டி மாவட்டத்திலிருந்து வந்துள்ள ஐஸ்வர்யா ரெட்டி, +2 தேர்வில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்தவர். தொழிலாளர் வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஏழை மாண வியான அவர் உயர் கல்வி கற்பிப் பது மிகுந்த சிரமமான ஒன்றாகவே இருந்தது. எனினும் அவர்தம் குடும்பத்தினர் தங்கள் பூர்வீக வீட்டை அடகு வைத்து, தன் மகளை தில்லிக்கு உயர்கல்வி கற்ப தற்காக அனுப்பி வைத்தனர். அவர் தான் ஓர் ஐ.ஏ.எஸ். அலுவலராக வேண்டும் என்ற கனவை நெஞ்சில் ஏந்தி இருந்தார்.அவருக்கு, அவருடைய திறமை மற்றும் அதிக மதிப்பெண் பெற்றிருந்த அடிப்ப டையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘இன்ஸ்பைர்’ கல்வி உதவித் தொகை (INSPIRE scholarship) பெறத் தேர்வு செய்யப்பட்டார். ஓராண்டாக கிடைக்காத உதவித்தொகை ஆனாலும் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அதன் மூலம் கிடைக்கவேண்டிய பணப் பயன் எதுவும் அவருக்கு அளிக்கப்ப டவில்லை. மார்ச் 20இலிருந்து அது நிலுவையில் இருந்து வரு கிறது. இதற்கு நிர்வாகத்தரப்பில் சமூக முடக்கம் காரணமாகக் கூறப் பட்டிருக்கிறது. ஆனாலும் அதே சம யத்தில் மாணவர்கள் கல்லூரிக் குக் கட்ட வேண்டிய கட்டணங்கள் மற்றும் தாங்கள் ஜீவித்தி ருப்பதற்குத் தேவையான உணவுக்கட்டணம் (mess bills) போன்றவற்றில் தளர்வே தும் செய்யப்படவில்லை. ஐஸ்வர்யா ரெட்டி நிலை குறித்து
லேடி ஸ்ரீராம்கல்லூரி மாண வர் பேரவை திரும்பத்திரும்ப நிர்வா கத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஆனாலும் அவர்கள் எதுவும் கூறாது மவுனம் கடைப்பிடித்திருக்கிறார்கள். இதேபோன்றுதான் ரோகித் வெமு லாவிற்கு தரப்பட வேண்டிய கல்லூரி உதவிப் பணம் கொடுக் கப்படாமல் அவர் தற்கொ லைப் பாதையைத் தேர்ந்தெடுக்க தள்ளப்பட்டார். இப்போது அதே போன்ற நிலைக்கு ஐஸ்வர்யா ரெட்டியும் தள்ளப்பட்டிருக்கிறார். தத்தளிக்கும் ஏழை மாணவர்கள் இவர்கள் போன்று ஆயிரக்க ணக்கான மாணவர்கள் – ஏழைகள் – உயர்கல்வி பயில வந்துவிட்டு, அரசாங்கத்திடமிருந்து கல்வி உதவிப் பணம் வராமல் தங்கள் படிப்பையும் வாழ்வையும் தொடர முடியாமல் தத்தளித்துக் கொண்டி ருக்கிறார்கள். ஆனாலும் அரசாங் கமோ, கல்லூரி நிர்வாகமோ அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. மாறாக, மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவிக் கட்ட ணங்களைக் காலத்தே செலுத்தாம லும், அவர்கள் கல்லூரிகளுக்குக் கட்ட வேண்டிய கட்டணங்களை உயர்த்தியும், விடுதிகளை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி யும், உணவு உண்டு வந்த உணவுக் கூடங்களை (mess) மூடியும், எல்லாவற்றிற்கும் மேலாக, நாடு முழுவதும் தங்களுடைய புதிய தேசியக் கல்விக் கொள்கையால் அவர்களை அறைந்து கொண்டும் இருக்கின்றன. பெண்கள் கல்லூரிக்கு வந்து உயர்கல்வி பயில்வது என்பது இந்தியா போன்ற ஒரு நாட்டில் மிகவும் சிரமம். ஐஸ்வர்யா சிரமங் களையெல்லாம் தாங்கிக் கொண்டு, புதுதில்லி வந்து ஆயிரக்க ணக்கான கனவுகளுடன் படிப்பைத் தொடர்ந்தார். எனினும் அவர் நிர்வா கத்தின் அலட்சியப்போக்கால் கொல்லப்பட்டுவிட்டார். 2020 புதிய கல்விக் கொள்கையானது, பணம் இல்லாதவர்கள், கல்வி யைத் தொடர உரிமையற்றவர்கள் என்று கூறுகிறது. மத்திய பாஜக அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கும், குடி மக்களுக்கும் தன்னுடைய செயல் கள் மூலமாக கிரிமினல்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருதுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் கீழான நீதி மற்றும் சமத்துவக் கொள்கை அனைத்தை யும் அரித்து வீழ்த்திக்கொண்டி ருக்கிறது. குறிப்பாக நாட்டில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை யையும், வாழ்வாதாரங்களையும் காலில்போட்டு மிதித்துக் கொண்டி ருக்கிறது.
எனவே இவர்களின் கொள்கைகள் மற்றும் செயல்க ளுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டி யது முக்கியமாகும். தில்லி, அனைத்திந்திய ஜனநா யக மாதர்சங்கத்தின், இளம் மாணவி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டிக்கிறது. அம்மாணவிக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் என்று கோருகி றது. அவருக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவிப்பணத்தை முழுமையாக அவர்தம் குடும்பத்தி னருக்கு அளித்திட வேண்டும். அரசாங்கத்திடமிருந்து மேலும் கூடு தலாக இழப்பீட்டுத் தொகை யும் பெற்று அளித்திட வேண்டும். இதேபோன்று இதர மாணவர்க ளின் கல்வி உதவித்தொகைகளை யும் உடனடியாக அவர்களின் கணக் கில் சேர்ப்பித்திட வேண்டும். கல்லூரியில் சேர்ந்துள்ள எந்த மாண வரையும் கொரோனா வைரஸ் தொற் றால் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கக் கூடிய நிலையில் தங்கள் படிப்பை யும், வாழ்க்கையையும் தொடர்வ தற்கு சிரமங்களை ஏற்படுத்தாது இருப்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். (ந.நி.)