tamilnadu

img

பிரச்சாரத்தில் வெயிலை தவிர்க்க ஆள்மாறாட்டம் செய்த கவுதம் காம்பீர் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பிரச்சாரத்தில் வெயிலை தவிர்க்க கிழக்கு தில்லி பா.ஜ.க வேட்பாளர் கவுதம் காம்பீர் ஆள்மாறாட்டம் செய்ததாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.


தில்லியின் நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றான கிழக்கு தில்லிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை வேட்பாளராக பா.ஜ.க நிறுத்தியுள்ளது. ஆறாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து முடிவடைந்துள்ளது. நாளை ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன.


இந்நிலையில், தில்லியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கவுதம் காம்பீர் வெயிலை தவிர்க்க தன்னை போல உள்ள ஒருவரை தனது வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி ஆள்மாறாட்டம் செய்ததாக தில்லியின் துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான மணீஷ் ஷிசோதையா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இந்நிலையில், தில்லியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கவுதம் காம்பீர் வெயிலை தவிர்க்க தன்னைபோல உள்ள ஒருவரை தனது வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபத்தி ஆள்மாறாட்டம் செய்ததாக தில்லியின் துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான மணீஷ் ஷிசோதையா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

;