சமம் பெண்கள் சுயசார்பு இயக்கத்தின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி புதுச்சேரி பாகூர் பகுதியில் இளம் பெண்கள் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் பெண் உரிமையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் வாலிபர் சங்கத்தின் முன்னாள் தமிழ் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி அசும்தா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் சந்திரா ஆகியோர் பேசினர்.