புதுச்சேரி, மார்ச் 12- வேலை நீக்கம் செய்யப் பட்ட காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர் களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என புதுச் சேரி அரசை சிஐடியு வலியு றுத்தியுள்ளது. இது குறித்து சிஐடியு புதுவை பிரதேச துணைத் தலைவர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- புதுச்சேரி பெருந்தலை வர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேலை செய்துவந்த 153 தொழிலாளர்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி மார்ச் 8 அன்று திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகத்தின் இந்த நிலை பாடு தொழிலாளர் சட்ட விதிக ளுக்கு முற்றிலும் எதிரா னது. மேலும் 5 ஆண்டுக ளுக்கும் மேலாக தொழி லாளர்களிடம் வேலையை வாங்கிய நிர்வாகம் அவர்க ளுக்குரிய சொற்ப ஊதியத் தைக் கூட கொடுக்காமல் வஞ்சித்து வந்துள்ளது. இந்த வேலையை நம்பி தங்களது வாழ்வை நகர்த்தி வந்த இவர்களின் குடும்பங் கள் இன்று வீதிக்கு தள்ளப் பட்டுள்ளது. வேலை மற்றும் ஊதியம் போன்றவற்றில் முன்னு தாரணமாக விளங்க வேண்டிய ஒரு அரசுத்துறை நிறுவனமே இது போன்ற சட்ட விரோதமாக நட வடிக்கையில் ஈடுபடுவது, தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக துவங்கப்பட்டு திறம்பட செயல்பட்டு வந்த புதுச்சேரி வேளாண்அறிவி யல் நிலையம் பல்வேறு பெருமைகளை பெற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இந்திய நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது. எனவே மீண்டும் 153 தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு மேலாக வழங்க வேண்டிய ஊதிய பாக்கியை உடனடி யாக வழங்க வேண்டும். புதுச்சேரி அரசும் முதலமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச் சர் இதில் தலையிட்டு பாதிக் கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.