tamilnadu

img

முதல் இந்தியா வான்படை பெண் அதிகாரி காலமானார் 

இந்தியா வான்படையின் முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி (ஓய்வு) 96 வயதில் காலமானார். இவர் 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தார். 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி இராணுவ மருத்துவப் படையில் நியமிக்கப்பட்டார்.  அதே நாளில் இருந்து விமானப்படைக்கு நியமிக்கப்பட்டார். விங் கமாண்டர் (ஓய்வு) டாகடர் விஜயலட்சுமி ராமணன், இந்திய விமானப்படையின் முதல் பெண் ஆணையிடப்பட்ட அதிகாரியாகும். விஷிஷ் சேவா பதக்கம் (வி.எஸ்.எம்) பெற்ற ராமணன் ஞாயிற்றுக்கிழமை முதிர்ச்சி காரணமாக காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விமானப்படை மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றியுள்ளார். அவர், ஆகஸ்ட் 1972 இல் விங் கமாண்டர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். மேலும் விஷிஸ்ட் சேவா பதக்கம் கொடுத்து ரவிக்கப்பட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு. அவர் பிப்ரவரி, 1979 இல் ஓய்வு பெற்றார்.
இவருக்கு மகள், மகன் உள்ளனர். ரமணன் கர்நாடக இசையிலும் பயிற்சியளிக்கப்பட்டார். மிகச் சிறிய வயதிலேயே அகில இந்திய வானொலியில் கலைஞராக இருந்துள்ளார்.