tamilnadu

img

பட்டமேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு: எஸ்எப்ஐ பயிற்சி முகாம்

புதுச்சேரி,மே.14-இந்திய மாணவர் சங் கத்தின் புதுச்சேரி பிரதேச குழுவும், புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக கிளையும் இணைந்து பல்கலைக் கழகத்தில் பயிலும் வகையில் பட்டமேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி முகாம் புதுச்சேரி விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் தொடங்கியுள்ளது. சங்கத்தின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.டி கண்ணன் பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசினார். பிரதேச தலைவர் ஜெயப்பிரகாஷ், சங்கத்தின் முன்னாள் மத்தியக் குழு உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். புதுச்சேரி பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள் அருண், நூருதீன், பிரதேச நிர்வாகிகள் பிரவீன், செம்மலர், வந்தனா, வினோத் ஆகியோர் பங்கேற்றனர்.20 நாட்கள் நடைபெறும் இப் பயிற்சி வகுப்பினை தினந்தோறும் பல்வேறு பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்கள், பட்டமேற்படிப்பு பயின்று வரும் மாணவர்கள், நுழைவுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.