tamilnadu

img

தில்லி சுகாதார அமைச்சர் உடல் நிலை மோசம் - பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், அவருக்கு ப்ளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர  ஜெயிகனுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு  தில்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை அடுத்து, அவருக்கு பரிசோதனை செய்தபோது கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில், அவர் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு ப்ளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.