புதுச்சேரி, அக்.12- நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு காரணமான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து, அக்டோபர் 10 முதல் 16 வரை சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்) ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் பிரச்சார இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக புதுவை காந்தி வீதி அமுத சுரபி எதிரில் மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். சிபிஎம் மூத்த தலைவர் தா.முருகன், சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் நாரா. கலைநாதன் ஆகி யோர் பேசினர். இதேபோல் பாக்கு முடையான்போட், முதலி யார்பேட், கதிர்காமம், வில்லியனூர், மதகடிப்பட்டு, பாகூர் ஆகிய 7 மையங்க ளில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதில் சிபிஎம் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், சிபிஐ- எம்எல் மாநிலச் செயலாளர் பாலசுப்பிர மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.