tamilnadu

அமைப்புசாரா நல சங்கத்தை வாரியமாக மாற்றி அறிவித்திட சிஐடியு வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜூலை 23- அமைப்புசாரா நல சங்கத்தை வாரியமாக மாற்றும் அறிவிப்பை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரி லேயே வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி முதல்  வரை சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதேச செயலாளர் சீனிவாசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அரசின் 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆட்டோ தொழிலாளர்கள், சாலையோர  வியாபாரிகள், சுமைப்பணி தொழிலாளர்கள், கடை களில் வேலை செய்வோர், டெம்போ ஓட்டுநர்கள், தையல் தொழிலாளர்கள் என 27 வகையான தொழிலா ளர்கள் அமைப்புசாரா நல சங்கத்தில் உறுப்பி னர்களாக உள்ளனர். மேற்படி நலச்சங்கத்தை கடந்த 15 ஆண்டு களுக்கும் மேலாக  நலவாரியமாக மாற்றக்கோரி வலி யுறுத்தி வரும் நிலையில் நலவாரியம் பற்றிய அறி விப்பு எதுவும் இடம் பெறாதது அதிர்ச்சியளிக்கிறது. அமைப்புசாரா நல வாரியம் அமைத்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரி சிஐடியு  தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் போது மட்டும் நலவாரி யம் அமைக்கப்படும் என முதல்வர் உறுதியளிக்கி றார். முதல்வர் பொறுப்பை ஏற்று நான்கு ஆண்டு நிறைவடைந்தும் இன்னும் நலச்சங்கத்தை நலவாரிய மாக மாற்றாதது அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2  மாதங்களுக்கு முன் அமைப்புசாரா தொழிலாளர்க ளுக்கு வாரியம் அமைக்க துணைநிலை ஆளுநர்  ஒப்புதல் அளித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.  தற்போது 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட்  போட்ட முதல்வர்,  அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களை காப்பதற்கு 10 கோடி ரூபாய் கூட ஒதுக்க  மனம் இல்லாதவராக உள்ளார். அரசின் தொழிலாளர் விரோத போக்கை சிஐடியு  வன்மையாக கண்டிக்கிறது. இந்த பட்ஜெட் தொடரி லேயே அமைப்புசாரா நல வாரியம் அமைக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.  இல்லையென்றால் அனைத்து அமைப்புசாரா தொழி லாளர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.