புதுச்சேரி, ஆக. 12- வில்லியனூரில் உள்ள ஏழை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற செடல் உற் சவத்தில் முகக் கவசம் அணி யாமல், தனிமனித இடை வெளியை கடைபிடிக்காமல் இருந்ததாக அதிமுக முன் னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள னர். புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் செவ்வா யன்று (ஆக.11) நடைபெற் றது. பொதுமுடக்கம் காரண மாக பக்தர்கள் கோயில் முன் அலகு குத்திக் கொண்டு அங்கேயே வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றி னர். இந்நிலையில் அங்கி ருந்த காவல் துறையினர் பக்தர்கள் தனி மனித இடை வெளியை கடைபிடிக்க வேண்டும், வேண்டுதல் நிறை வேறியவர்கள் இங்கிருந்து செல்ல வேண்டும் என அறி வுறுத்தி வந்தனர். ஆனால் அங்கிருந்த அதி முக முன்னாள் எம்எல்ஏ நட ராஜன் உள்ளிட்ட சிலர் முகக் கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்ட மாக இருந்துள்ளனர். காவல் துறையினர் அவர்களிடத்தில் தனி மனித இடைவெளியை கடைபிடியுங்கள், முகக்கவ சம் அணியுங்கள் என வலி யுறுத்தினர். அப்போது அங்கிருந்த சிலர் நெல்லித் தோப்பு சர்ச் கொடியேற்ற விழாவில் முதலமைச்சர் உள்ளிட்டோர் தனிமனித இடைவெளியை கடை பிடிக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளனர். இதையடுத்து வில்லிய னூர் காவல் துறையினர் அதி முக முன்னாள் எம்எல்ஏ நட ராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள னர்.