tamilnadu

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திடுக: திருமாவளவன்

புதுச்சேரி, ஜூன் 8- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்  என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி யுள்ளார். மருத்துவ கல்லூரியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான இட ஒதுக்கீடு அளிக்காத மத்திய அரசை கண்டித்து  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதுவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொல்.திருமாவளவன் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் இயற்ற  வேண்டும். மத்திய அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பொதுத்துறை நிறுவ னங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சித்து  வருகிறது. கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது  ஆபத்தானது. தொற்று அதிகரித்து வரும் நிலையில் 10ஆம்  வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;