திருவனந்தபுரம், மார்ச் 3- கேரளத்தில் தனியார் நிறுவனங்கள் தயா ரித்து விற்கும் பாட்டில் குடிநீர் லிட்டருக்கு ரூ.13 என தீர்மானித்து அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது. கேரளத்தில் பாட்டில் தண்ணீர் தயா ரிக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களும் அவர்களது எம்ஆர்பி (அதிகபட்ச விலை) ரூ.13 என குறிப்பிட வேண்டும். குறிப்பிடும் விலைக்கு அதிகமான தொகைக்கு விற் பனை செய்யப்பட்டால் அந்த நிறுவனத் துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1986இல் கேரள அத்தியாவசிய பொருட் கள் கட்டுப்பாடு சட்டத்தின்படி பாட்டில் தண்ணீர் அத்தியாவசிய பொருளாக அறி விக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு 19.7.2019இல் வெளியிடப்பட்டது. அத்தியா வசிய பொருளாக அறிவிக்கப்பட்ட பொரு ளின் விற்பனை விலையை தீர்மானிக்க அர சுக்கு அதிகாரம் உள்ளது. பாட்டில் குடிநீர் உற்பத்தியாளர்களின் பல்வேறு அமைப்பு கள், வியாபாரி, தொழில் அமைப்புகளின் தலைவர்களுடன் அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் அடிப்படையில் ரூ.13 என்கிற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோடை காலம் முதல் மக்க ளுக்கு பயன்படும் ஒரு சட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்திய தரக்கட்டுப் பாட்டு நிறுவனத்தால் வரையறுக்கப்பட் டுள்ள IS -14543 விதிமுறைகளுக்கும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க தயாரிக்கப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் எம்ஆர்பி இவ்வாறு நிச்சயிக்கப் பட்டுள்ளது.