tamilnadu

img

பிரசாந்த் பூஷனின் மற்றோரு வழக்கு - அடர்னி ஜெனரலிடம் உதவி கோரிய நீதிமன்றம்

பிரசாந்த் பூஷனின் மற்றொரு வழக்கினை முடிக்க அடர்னி ஜெனரலிடம் உதவியை கோரியுள்ளது நீதிமன்றம். முன்னதாக நீதிபதிகள் அவமதிப்பு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தது.

வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு ஒன்றினை முடித்து வைக்க அடர்னி ஜெனரலின் உதவியை உச்சநீதிமன்றம் நாடியுள்ளது.கடந்த 11 ஆண்டு பழமையான இந்த வழக்கினை முடிக்க உச்ச நீதிமன்றம் உதவி கோரியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் தெஹல்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது பிரசாந்த் பூஷன் கூறிய அறிக்கைகள் இந்த அவமதிப்பு வழக்கில் அடங்குகிறது. அதில் இந்தியாவின் 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல் மிக்கவர்கள் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கானது அக்டோபர் இரண்டாவது வாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.