tamilnadu

img

ஆvசிட் வீச்சு குற்றவாளிகள் நாகரீகமற்ற, இதயமே இல்லாதவர்கள்

கடந்த 2004-ல், இமாசலப் பிரதேசம் மாநிலத்தில் ஆசிட் வீச்சு சம்பவத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த வழக்கில், குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.


இதை அடுத்து, குற்றவாளிகள் தண்டணையை குறைக்க கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து, அபராத தொகையை தலா ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார்.


இதனை அடுத்து, குற்றவாளிகளுக்கு ஆதரவாக குறைக்கப்பட்ட தண்டனைக்கு தடைவிதிக்க கோரி கடந்த 2008-ஆம் ஆண்டு மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இமாசலப்பிரதேசம் மாநில அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் அஜய் ரஸ்டோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளம்பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு எந்த விதத்திலும் கருணை காட்ட முடியாது. ஆசிட் வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய நாகரீகமற்ற, இதயமே இல்லாத குற்றவாளிகள் கருணை அடிப்படையில் தண்டனை குறைப்பு கோர தகுதியற்றவர்கள் என தெரிவித்தனர்.


மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளிகள் இருவரும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடாக தரவேண்டும். மாநில அரசும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;