tamilnadu

img

சித்துவுக்கு 3 நாள் தடை

புதுதில்லி:

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சருமான சித்து, பர்சோய் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, மஜ்லிஸ் கட்சி இஸ்லாமியர் வாக்குகளை சிதறடிப்பதாகவும், ஆனால், இஸ்லாமியர்கள் அதற்கு இரையாகக் கூடாது என்றும் கூறியிருந்தார். இந்த பேச்சுக்காக, சித்து மீது ஏற்கெனவே போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சித்து பிரச்சாரம் செய்வதற்கு 3 நாள் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


;