உயர்த்திய கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இலவச பேருந்து வசதியை தொடர வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த இரு நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு ஞாயிறன்று (மார்ச் 1) போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.