tamilnadu

ஒவ்வொரு கோப்புக்கும் தில்லி சென்று ஒப்புதல் பெறவேண்டுமா?

புதுச்சேரி, ஜூன் 7- போராட்டம் நடத்த  முதல மைச்சருக்கு உரிமையில்லையா என்று புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி  துணை நிலை ஆளு நருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று (ஜூன் 7) திடீரென ஆய்வு  நடத்திய பின்னர் செய்தியாளர்க ளிடம் அவர் பேசியது வருமாறு:  தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகளை திறக்க அரசு அனு மதி அளித்துள்ளதுபோல் புதுவை யிலும் அனுமதி வழங்குவது தொடர்பாக புதுவையில் உள்ள  வணிக நிறுவன உரிமையா ளர்கள், பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டுத்தான் முடிவு செய்யவேண்டும். சட்டம்-  ஒழுங்கு பிரச்சனையை கருத்தில்  கொள்ள வேண்டும். எந்தெந்த கடைகளை திறந்து வைக்கலாம் என்பதுகுறித்தும் முடிவு செய்ய வேண்டும். உடனடியாக எதை யும் செய்துவிட முடியாது என்றார்.  உள்துறையை வைத்துள்ள முதலமைச்சர் எனக்கு எதிராக  வன்முறையை தூண்டுகிறார் என ஆளுநர் கிரண்பேடி கூறி யுள்ளாரே? என்ற கேள்விக்கு போராட்டம் நடத்த முதலமைச்  சருக்கு உரிமை இல்லையா? மக்கள் பிரச்சனைக்காக எதை யும் செய்ய நாங்கள் தயங்க மாட்டோம் என்றும் ஆளுநரின் தவறான செயல்பாடுகளால் 3  ஆண்டுகளாக புதுவையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. ரோடியர், சுதேசி, பாரதி  மற்றும் கூட்டுறவு ஆலைகளை புணரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

வருமானம் தரக்கூடிய திட்டங்களை அரசால் நிறை வேற்ற முடியவில்லை. எந்த கோப்பு அனுப்பினாலும் கால தாமதம் செய்யப்படுகிறது. கோப்புகளை திருப்பி அனுப்பு கின்றனர். அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். தேசிய அளவில் நாட்டின் வளர்ச்சி 5.7 சத வீதம். ஆனால், புதுவையில் மாநில வளர்ச்சி 11  சதவீதமாக உள்ளது. மக்கள் நலத்  திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் போனால் மாநில வளர்ச்சி குறைந்துவிடும். காவலர் மற்றும் ஆசிரியர் பணியிடத்தை ஓராண்டுக்கு முன்பே நிரப்பி இருக்கலாம். தேவையற்ற காலதாமதம் இதில்  ஏற்பட்டது. எந்த ஒரு பிரச்ச னைக்கும் மக்கள் ஆளுநரை  கேட்க மாட்டார்கள். எங்களைத் தான் கேட்பார்கள். நாங்கள்தான் பதில் கூறும் நிலையில் உள்ளோம். விவசாயக் கடனை தள்ளுபடி செய்து கவர்னரிடம் கோப்பு அளித்தோம். இந்த கோப்பை திருப்பி அனுப்பி விட்டார். டெல்லியில் உள்துறை வரை எடுத்துச்சென்று அனுமதி வாங்கினேன். இதேபோல் ஒவ்வொரு கோப்பையும் டில்லிக்குச்  சென்று  அனுமதி பெற வேண்டுமா? பியூன் நியமிக்ககூட டெல்லி  சென்று அனுமதி பெறுவது  அவசியமா? ஆளுநர் மீது எங்க ளுக்கு தனிப்பட்ட குரோதமோ, வெறுப்போ இல்லை. இருப்பி னும் துணைநிலை ஆளுநரை மாற்றவேண்டும் என்ற கருத்தில் மாற்றம் இல்லை என்றும் நாரா யணசாமி கூறினார். பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு குறித்து அமைச் சரவை கூட்டத்தில்தான் முடி வெடுக்க வேண்டும் என்றும் அவர்  தெரிவித்தார்.