tamilnadu

img

பிப்ரவரியில் மாநிலம் முழுவதும் வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்

கரூர், ஜன.1 - போதை ஒழிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு சார்பில் ஞாயிறன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.  கிருஷ்ணராயபுரத்திலிருந்து துவங்கிய போட்டி, பழைய ஜெயங் கொண்டம் நான்கு ரோடு வரை நடை பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கு சங்க மாவட்டச் செயலாளர் ஜி. பார்த்திபன் தலைமை வகித்தார். மாநி லச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலை வர் கே.ராஜா, மாவட்ட பொருளாளர் எ.சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ஜி.தர்மலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பிரபாகரன் ஒன்றிய குழு உறுப்பினர் வி.நாக ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் போட்டியில் வென்ற வர்களுக்கு பரிசு வழங்கி பேசிய தாவது: இந்தியா முழுவதும் இளைஞர் கள், மாணவர்களை போதைக்கு அடிமை யாக்கி, அவர்களின் எதிர்கால வாழ்வை பாழ்படுத்தும் கொடுமையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. குஜராத் மாநி லத்தில் உள்ள அதானிக்கு சொந்த மான துறைமுகத்தில், சமீபத்தில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பிடிபட்டன. ஆனால் இதன் மீது ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.

இளைஞர்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்ப தற்கும், அவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிப்ரவரி மாதம் வாலிபர் சங்கத்தின் சார்பில், போதை இல்லா தமிழகத்தை உரு வாக்குவதற்கு, மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறு வதற்கான  இயக்கம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழு வதும் பல்வேறு நிகழ்வுகளை வாலிபர் சங்கம் சார்பில் நடத்தி வருகிறோம்.  பொங்கல் திருநாளன்று, தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் ஒற்றுமையை வலி யுறுத்தி மத நல்லிணக்க விழா வை நடத்த உள்ளோம். இவ்விழா  ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக் கணக்கான மக்களின் பங்கேற்போடு நடைபெறும்.  போதைக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட, தமிழக அரசு பல்வேறு துறைகள்  மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கிறது. குறிப்பாக காவல்துறை மூல மாகவே பல்வேறு விழிப்புணர்வுகளை நடத்துகிற இச்சூழலில், போதைக்கு எதிராக வாலிபர் சங்கம் நடத்தக்கூடிய மினி மாரத்தான் போட்டிக்கு, காவல்துறை அனுமதி மறுப்பது சரியல்ல. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற 5 வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2 ஆவது பரிசாக ரூ.4000, 3 ஆவது பரிசாக ரூ.3000, 4  ஆவது பரிசாக ரூ.2000, 5 ஆவது பரிசாக  ரூ.1000 மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.