tamilnadu

img

கடலூர் புத்தக கண்காட்சியில் அறிவியல் புத்தகங்கள் வெளியீடு

கடலூர் புத்தக கண்காட்சியில்  அறிவியல் புத்தகங்கள்  வெளியீடு

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில்  பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ட்ரன் சார்பில் அறிவியல் புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.  ஆயிஷா இரா. நடராஜன் எழுதிய சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் ஒரு ஜான்சி ராணி,  இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி என்ற இரண்டு புத்தகங்கள்  வெளியிடப்பட்டன. நிகழ்ச்சிக்கு சாகித்திய அகடமி விருது பெற்ற குறிஞ்சி வேலன் தலைமை தாங்கினார்.  திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானி பெ.சசிகுமார் புத்தகத்தை வெளியிட்டார்.புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு இந்திய மருத்துவக் கழகத்தின் பி. இளந்திரையன், சங்கு இதழ் ஆசிரியர் வளவ துறையன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஜானகிராஜா, கடலூர் தலைவர் கோமதி, தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் வைத்தியலிங்கம், கடலூர் தமிழ் சங்கத்தின் செயலாளர் குறிஞ்சி ரவி, தமுஎகச தெரசா கேத்தரின், பிஎஸ்என்எல் சிவக்குமார், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் இரா.நடராஜன் ஏற்புரை நிகழ்த்தினார். தமுஎகச செயலாளர் கவிஞர் பால்கி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பாரதி புத்தகாலையம் எஸ் .ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.