நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலையில் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.