புதுச்சேரி, ஆக. 19- ஏ.எப்.டி பஞ்சாலையை மூடும் முடிவை புதுச்சேரி அரசு திரும்பபெற வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி பிரதேச செயலா ளர ஜி.சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பிரதேச மக்களின் வாழ்வாதார மாகவும், வேலைவாய்ப்புக்கான ஊற்றுக் கண்ணாகவும், அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் மாபெரும் ஆலையாக விளங்கி யது ஏ.எப்.டி பஞ்சாலை. புதுச்சேரி பொரு ளாதாரத்திற்கு வலுகூட்டும் நிறுவனமாக செயல்பட்டு வந்த ஆலையை மூடுவதாக தற்போது நிர்வாகம் அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே தானே புயலுக்கு பின்னர் ஆலையை புனர மைத்து நவீனப்படுத்தி இயக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் பல்வேறு முனை களில் தொடர்ந்து போராடி வந்தன. ஆனால் மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டியதால் தற்போது இந்நிலை ஏற்றபட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தை பற்றியோ, தொழிலா ளர்களின் இன்னல்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் பற்றியோ கொஞ்சம் கூட கவலைப்படாத துணை நிலை ஆளுநர் இந்த ஆலையை மூடுவதில் குறியாக இருக்கிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு பஞ்சாலைகளை பாதுகாப்போம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து மக்களவை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன. பின்னர் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணியை சந்தித்து பஞ்சாலைகளை பாதுகாக்க வேண்டும், அதை மேம்படுத்த நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது. அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் மக்களவையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி உறுப்பி னர் வைத்தியலிங்கமும் பேசியிருந்தார். இந்நிலையில் ஏ.எப்.டி பஞ்சாலையை நிரந்தர மாக மூடுவது என்ற அறிவிப்பை தற்போது ஆலை வாயிலில் ஒட்டியுள்ளனர். இது அரசின் கொள்கை முடிவு எனக் கூறப்பட்டாலும், சுதந்திர நன்னாளில் வெளி யான இத்தகைய அறிவிப்பு ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. எனவே மக்கள் சொத்தான ஏ.எப்.டி. ஆலையை நிரந்தரமாக மூடுவது என்ற அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து தரப்பட்ட தொழிலாளர்களும் ஆலையை பாதுகாக்க ஒன்று சேர்ந்து குரல்கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.